வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!!

1749

கொரோனா..

வவுனியாவைச் சேர்ந்த 3 பேருக்கு இன்று (06.02.2021) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான முடிவுகளில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று வடமாகாணத்தைச் சேர்ந்த 727 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் வெளியானது. முடிவுகளின்படி வவுனியாவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இன்றுவரை வவுனியாவில் 370க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.