இன்று மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் வவுனியா சுகாதார சேவை தாதியருக்கான விசேட கருத்தரங்கு ஒன்று இன்று காலை 9 மணிமுதல் 12 மணி வரை சுகாதார சேவை அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழு ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் மகளிர் உரிமைகள் சம்பந்தமாகவும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணைகுழு அதிகாரிகளால் விரிவாக ஆராயப்பட்டது. இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான தாதியர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
-படங்கள் பாஸ்கரன் கதீசன்-