யாழ்ப்பாணத்தில் புகையிரதம் மோதி ஆசிரியரொருவர் பலி!!

1958


யாழில்..



யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கடுகதி புகையிரதம் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அரியாலை, நாவலடி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



சம்பவத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரான வி.பாலரூபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.




இதேவேளை உயிரிழந்தவரின் உடல் நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.