உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை முன்னைநாள் துணை முதல்வர் திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி!!

327

Kovilkulam

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்குள இளைஞர் கழக முதல்வரும், வவுனியா நகரசபை முன்னைநாள் துணை முதல்வருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி.

வடமாகணத்தில் வவுனியாவை பொறுத்தவரை பெண்கள், ஆண்களுக்கு இணையாகக் கல்வி, பொருளாதார, அரசியல், சமூக நிலைகளில் முன்னேற்றங்கள் கண்டிட தேவையான பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்திய பெருமை எமக்கு உண்டு.

நாம் வவுனியா நகர ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் ஏறாளம். பல்வேறு வகையிலும் மகளிர் சமுதாயம் கல்வி, அறிவியல், அரசியல் சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டு அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்குப் பல வகையிலும் வழிவகுத்த பெருமை எமது அமைப்பான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கும், செயல்படுத்திய எமக்கும் உண்டு என்பதனை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன்.

இதன் விளைவாகத்தான் வவுனியாவில் இன்று எங்கும் எல்லா அலுவலகங்களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்கு பெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை ஊரும், உலகமும் கண்டு உவந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர் கொள்ளும் சோதனைகளை, உறுதியுடன் எதிர் கொண்டு அவற்றை வெற்றி படியாக்கி, புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மகளிர் தின நல்வாழ்த்துகளைத் என் தமிழ் மகளிர் சமுதாயம் முழுமைக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.

நன்றி.