காட்டில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கும் பொம்மைக் குழந்தைகள் : திகிலூட்டும் புதிய மர்மம் : பீதியில் மக்கள்!!

1548

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் திகிலூட்டும் விதமாக நூற்றுக்கணக்கான பொம்மைக் குழைந்தைகள் மரங்களில் ம.ர்மமான முறையில் ஆணியடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Staffordshire பகுதியில் உள்ளது ஹெட்னஸ்ஃபோர்டு. அங்கு உள்ள பிரிண்ட்லி வில்லேஜ் கார் பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள மரங்களில் பொம்மை குழந்தைகள் ஆணி அடைக்கப்பட்டுள்ளன.

அருகிலுள்ள தரையில் ஒரு ouija போர்டும் கிடந்துள்ளது. கடந்த மாதம் Staffordshire காட்டுப் பகுதியில் ஆய்வுக்காக வந்த ஒரு பெண், கேனாக் சேஸ் வழியாக நடந்து செல்லும்போது இந்தக் காட்சியைக் கண்டு பயந்துள்ளார்.

பொம்மைகள் எங்கிருந்து வந்தன, அப்பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. முதல் உலகப் போ.ருக்குப் பின்னர் 1920-களின் நடுப்பகுதி வரை ஓய்வூதிய அமைச்சகம் இருந்த இடத்திற்கு அருகில் இந்த பொம்மைகள் அமைந்துள்ளன.

1960-களுக்கு பிறகு அப்பகுதியில் யாரும் வசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 1950-களில் தான் அப்பகுதியில் தேவாலயம், பள்ளி, கால்பந்து கிளப் மற்றும் உழைக்கும் ஆண்கள் கிளப் ஆகியவை இருந்துள்ளன.