வவுனியாவில் பலசரக்கு விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்!!

4517

மகாறம்பைக்குளம் பகுதியில்..

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28.02.2021)மாலை தீப்பிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நா.சமாகியது.

குறித்த வர்த்தக நிலையம் இன்றுமாலை திறக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 5 மணியளவில் திடீர்என்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள்,

தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியது.

சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார ஒழுக்கு தீ விபத்திற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்