புதிய கட்சி தொடங்கவுள்ள மு.க.அழகிரி!!

547

Alagiri

சென்னை பம்மலில் பேசிய திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, இன்னும் இரண்டு மாதங்களில் புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்வேன் என்று கூறினார்.

இப்போது புதிய கட்சி குறித்து பரிசீலனையில் உள்ளதாகவும், இரண்டு மாதங்களில் முடிவை அறிவிப்பேன் எனவும் அவர் கூறினார்.

தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகத்தான் மு.க.அழகிரி மீது திமுக நடவடிக்கை மேற்கொண்டதாகவும், இப்போது அது இயலாமல் போயுள்ள நிலையில், அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதனை இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது மு.கருணாநிதியும் மறுக்கவில்லை. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் கட்சியில் மீண்டும் அவர் இணைவார் என்று கூறினார்.

இந்நிலையில் மு.க.அழகிரி புதிய கட்சி துவங்குவது குறித்து முடிவு அறிவிக்கவுள்ளதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.