3 மகள்களை வெறித்தனமாக குத்திக் கொன்ற தாயின் வெறிச்செயல்!!

305

Knifஇத்தாலியில் 3 மகள்களை கத்தியால் குத்தி கொன்ற தாயின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள லெக்கோ நகரில் எட்லிரா டொபுருசி (37) என்ற பெண் தனது மூன்று மகளுடன் வசித்து வந்தார்.
இவர்,கிமோனா (13), கேனி (10) மற்றும் லின்ட்ஸோ (4) ஆகிய தன் மூன்று மகள்களையும் கத்தியால் குத்தியுள்ளார்.

அப்போது வலியால் துடித்துடித்த இம்மூவரிட்ட கூச்சலில் அண்டை வீட்டுக்காரர்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், எட்லிரா உடல் முழுவதும் இரத்தம் வழிந்தோட வந்து நின்று அனைவரையும் கொன்றுவிட்டேன் என கூச்சலிட்டதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.

இச்சம்பவத்தில் பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தனது கணவர் கடந்த 7ம் திகதி அவரின் சொந்த நாடான அல்பேனியாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதால் அவரின் பிரிவு தாங்க முடியாமல் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் எட்லிரா தனது மகள்களை அவர்களது படுக்கை அறைகளில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரியவந்துள்ளது.