அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 80,000 தேனீக்கள் கொட்டியதில், 71 வயது மூதாட்டி படுகாயமடைந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பால்ம் பாலைவன பகுதியிலுள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக 71 வயது மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பகுதியில் தேனீக்கள் வளர்ப்பவர் ஒருவர், தேன் எடுப்பதற்காக சுமார் 80,000 தேனீக்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய தேன் கூட்டைக் கலைத்துள்ளார்.
இதிலிருந்து வெளிவந்த தேனீக்கள், அங்கு சென்று கொண்டிருந்த மூதாட்டின் உடல் முழுவதையும் மூடியதுடன், 1,000 முறை அவரைக் கொட்டின.
உடனே அருகில் உள்ள தீயணைப்புப் படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்தவர்கள் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.