கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : 14 பேர் பலி, 47 பேர் படுகாயம்!!(CCTV காணொளி)

24411

விபத்து..

பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.