திருமணம் செய்து வைக்காததால் தாய், தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!!

598

Knifவேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள நாகன்குரடை கிராமத்தை சேர்ந்தவர் மணி (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களது மகன் முரளி (23) தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார்.

முரளி தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் அடிக்கடி கூறிவந்தாராம். இந்நிலையில் நேற்று இரவும் முரளி அவரது தந்தையிடம் திருமணம் பற்றி பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முரளி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் மணியை வெட்டினார்.

இதனை கண்டு அலறியபடி ஓடிவந்த தாய் வசந்தா முரளியை தடுக்க முயன்றார். அவரையும் முரளி வெட்டினார்.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட முரளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது பற்றி தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பிணமாக கிடந்த மணி, வசந்தா தம்பதியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திமிரி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முரளியை தேடி வருகின்றனர்.