3 கட்சிகள் என்னை அழைக்கின்றார்கள் : நான் அரசியலில் குதிப்பது நிச்சயம் என்கிறார் நமீதா!!

333

Actress Namitha at Dr Batra's Annual Charity Photo Exhibition3 கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருப்பதால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

நடிகை நமீதா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் ஓயாத அலைகளாய் எழுந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது.

நல்ல விடயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றும் எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், 16 வயதில் நான் குஜராத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். பெரும்பாலான கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். நான்கைந்து வருடங்களில் என்னை, தமிழ் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். நான் சென்னைக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது.

இன்னும் என்னை, ரசிகர்கள் மறக்கவில்லை. தமிழக மக்கள், என்மீது அன்பு செலுத்துகிறார்கள். பாசமாக பழகுகிறார்கள். பதிலுக்கு அவர்களுக்கு நான் ஏதாவது செய்யவேண்டும். அதை அரசியல் மூலம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன்.

டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவத்துக்குப்பின், இந்திய மக்கள் மனதில் நிறைய மாற்றமும், விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த தேர்தலில் நிறைய ஓட்டுகள் பதிவாகும் என்றும் ஒரு சின்ன கறுப்பு புள்ளிக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை இந்த தேர்தலில் தெரிந்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.