இந்திய தேர்தலை வைத்து 60,000 கோடிக்கு இரகசிய சூதாட்டம்!!

515

Moneyஇந்தியப் பாராளுமன்ற தேர்தலை வைத்து இரகசிய சூதாட்டம் இடம்பெறுவது தெரியவந்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு இவ்வாறான சூதாட்டக்காரர்கள் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாடு முழுவதும் தரகர்கள் செயல்படுகிறார்கள்.

அவர்கள் முக்கிய நகரங்களில் சூதாட்ட மையங்கள் அமைத்து செயல்படுகிறார்கள். குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்கள், இரகசிய விடுதிகள் போன்ற இடங்களில் சூதாட்ட மையம் அமைத்துள்ளனர்.

கிரிக்கெட்டில் அணிகள் மீது பணம் கட்டிய சூதாட்ட பிரியர்கள், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என பணம் கட்டி விளையாடுகிறார்கள்.

நரேந்திரமோடி எப்படி பிரதமர் ஆவார் பாரதீய ஜனதாவுக்கு 200 இடம் கிடைக்குமா, 272 இடங்களை கைப்பற்றுமா, காங்கிரசுக்கு 100க்கும் குறைவான சீட்டுகள் கிடைக்கும், என பல குரூப்களாக சூதாட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதில் எது பலிக்கிறதோ அந்த குரூப் மீது பணம் கட்டியவர்களுக்கு பல மடங்கு பணம் கிடைக்கும். உதாரணமாக பாரதீய ஜனதா கூட்டணி 272 இடங்களை கைப்பற்றி நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என பணம் கட்டினால் அவர்களுக்கு 22 சதத்திற்கு 1 ரூபாய் என்ற அளவில் இலாபம் வழங்கப்படும்.

அவர்கள் சொன்னது நடக்காமல் அதற்கும் குறைவான சீட்டுகளைப் பிடித்தால் அவர்களுக்கு 1 ரூபாய்க்கு 22 சதம் தான் கிடைக்கும். இப்படி இலட்சக்கணக்கில் விகிதாச்சாரப்படி பணம் பகிர்ந்து அளிக்கப்படும்

பாரதீய ஜனதா மற்றும் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துதான் பெரும்பாலோர் பணம் கட்டுவதகாவும், காங்கிரஸ் மீது குறைந்த அளவு சூதாட்டக்காரர்கள் பணம் கட்டுகிறார்கள், அதுவும் தோற்கும் என்றுதான் பணம் கட்டி விளையாடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் சூதாட்டத்தில் 60 ஆயிரம் கோடி பணம் புரள்வதாகவவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சூதாட்டக்காரர்களை பொலிசாரும், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.