வீரப்பன் கூட்டாளிகள் ஐவரின் தூக்குத் தண்டனை குறைப்புக்கு எதிரான இந்திய அரசின் மனு தள்ளுபடி!!

752

High Courtவீரப்பன் கூட்டாளிகளான சைமன், மாதையா, பிலவேந்திரன் மற்றும் ஞானபிரகாசம் ஆகியோரின் தூக்குத் தண்டனை இந்திய உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தூக்துத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற தவறிய மத்திய அரசின் அணுகுமுறையை கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர்.

இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. நேற்று இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தீர்ப்பின் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.