பேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!!

318

Facebookஅமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா நகரின் மென்லோ பார்க் பகுதியில் உள்ள பேஸ்புக் தலைமையகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் என்று ஓர் மிரட்டல் அழைப்பு வந்தது.

இதனையடுத்து சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் அந்த அலுவலகத்தை மென்லோ பார்க் பொலிசார் சுற்றி வளைத்தனர்.
யாரையும் வெளியே போக அனுமதிக்காத பொலிசார் அனைத்து நுழைவாயில்களையும் பூட்டினர்.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மணியிலிருந்து 8.30 வரை பொலிசார் நடத்திய சோதனையில் விடுக்கப்பட்டது போலி மிரட்டல் என்பது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு பரபரப்பு நிலவியது.