இலங்கையில் மரமாக வளரும் பேனா தமிழரால் கண்டுபிடிப்பு!!

3158

பேனா..

இயற்கையுடன் இணைந்த வகையில் பயன்படுத்தக்கூடிய பேனையொன்றை கண்டியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த பேனை பயன்பாட்டின் பின்னரும், பலனை தரக்கூடிய வகையில் உள்ளதாக பேனையை கண்டுபிடித்துள்ள கண்டியைச் சேர்ந்த சுகிர்தன் தெரிவிக்கின்றார்.

பேனை பயன்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை மண்ணில் நடுவதன் ஊடாக, அதிலிருந்து மரங்களை வளர்க்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். இந்த பேனையானது, இயற்கையை வளர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.