நுவரெலியாவில் கோர விபத்து : 3 பெண்கள் பலி!!

2094


கோர விபத்து..



நுவரெலியா – ஹக்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றும் பார ஊர்தி ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்தின்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




இதேவேளை, முச்சக்கரவண்டியில் பயணித்த 51, 52 மற்றும் 20 வயதுகளை உடைய பெண்களே உயிரிழந்துள்ளனர். பார ஊர்தியின் சாரதி தப்பியோடியுள்ளதுடன் அதன் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பார ஊர்தி சாரதியின் கவனயீனத்தால் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.