வவுனியாவில் ஐந்து பேர் அதிரடியாக கைது!

7004

கைது..

வவுனியாவில் போ.தைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா பொலிஸார் நேற்றிரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து ஹெ.ரோயின் மற்றும் க.ஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதில் வைரவபுளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடமிருந்து 620 மில்லிக்கிராம் ஹெ.ரோயின் கை.ப்பற்றப்பட்டுள்ளது.அத்துடன், மற்றைய மூவரிடம் இருந்து 4 கிராம் க.ஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வி.சாரணையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.