வவுனியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம்!!

2018

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான முதியவர் ஒருவர் கோவிட்-19 தொற்று காரணமாக வெலிகந்தையில் நேற்று (01.04) உயிரிழந்துள்ளார்.

வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சில நாட்களிற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இதேவேளை அவரது உறவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.