இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

2042


விபத்து..



மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனை பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இன்று இடம்பெற்ற விபத்தில் 23,27 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களே காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வாழைச்சேனையிலிருந்து கல்முனைக்குச் சென்ற மோட்டார் சைக்கிளும்,மட்டக்களப்பிலிருந்து ஏறாவூருக்கு சென்ற மோட்டார் சைக்கிளுமே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.




இரண்டு மோட்டார் சைக்கிளும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.