வான் டயர் வெடித்து குடைசாய்ந்து விபத்து!!

1071

விபத்து..

மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வான் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்திற்கு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயணித்த வானின் டயர் வெடித்ததில் வான் குடைசாய்ந்து அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ளது.

வான் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.