கோழி இறைச்சியின் விலை இரு மடங்கு அதிகரிப்பு!!

1746

கோழி இறைச்சி..

கோழி இறைச்சியின் விலை தற்போதைய விலை விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 675 ரூபாய் முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

கோழி இறைச்சியை அரசாங்கம் நிர்ணயித்த விலையில் மாத்திரம் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ பொய்லர் கோழி இறைச்சியின் நிர்ணய விலை 430 ரூபாய் எனவும், குளிரூட்டியில் வைக்காத ஒரு கிலோ கோழி இறைச்சியை 375 ரூபாவுக்கும் விற்பனையாளர்களுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் இணங்கி இருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் விலை அதிகரித்திருப்பதால், அரசாங்கத்திற்கும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.