இங்கிலாந்தில் தமிழரின் கடையில் திருட வந்த முகமூடி திருடர்கள்!!(வீடியோ)

450

UK

இங்கிலாந்தில் ரொக்கர் சாலையில் அமையப் பெற்றுள்ள தமிழர் ஒருவரின் கடையினுள் முகமூடி அணிந்த திருடர்கள் நுழைந்து, பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது.

திருடர்கள் அவரை தொடர்ச்சியாக அச்சுறுத்தி அவருடைய பணப்பெட்டியினை திறந்து அதனுள் உள்ள பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

அச்சமயம் சுதாரித்துக்கொண்ட கடை உரிமையாளரான ராசரத்தினம் ராகுலன், அவர்களை நில துடைப்பான் பிடியினால் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் சிசிடிவி கமெராவில் கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது.