வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்..!

397

ACCIDENT_logo

வவுனியா ஏ9 வீதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோட்டர் சைக்கிள் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தரும் மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்த யுவதியும் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

நேற்று (24) மதியம் 1.30 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் பொலிசார் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வவுனியா நகரில் இருந்து வந்த தனியார் வைத்தியசாலை ஒன்றின் தாதியர் தான் செலுத்தி வந்த மோட்டர் சைக்கிளின் வேகத்தை கட்டுபடுத்த முடியாது பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனால் குறித்த மோட்டர் சைக்கிளை செலுத்திவந்த யுவதியும் கடமையில் இருந்த பொலிசாரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இப் பகுதியில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-அதிரடி-