சிறப்பு சுற்றுநிருபம்..
தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடைமுறை தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்கள், வாரத்திற்கு இரண்டு வேலை நாட்கள், தங்களின் விடுமுறை நாட்களில் கழிக்கப்படாமல், சேவைக்கு சமுகமளிக்காதிருக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர் ஒருவருக்கு, மாதத்தில் சேவைக்கு சமூகமளிக்காதிருப்பதற்கான உச்சப்பட்ட கால எல்லையை, 8 நாட்களுக்கு மேலாக அதிகரிக்க கூடாது.
தமது நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமான முறையில், அவரை சேவைக்கு அழைக்காதிருப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.