கொரோனா தொற்றாளர்கள்..
இலங்கையில் அதிகபடியான கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் இதுவரையில் 1,466 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 104,953 ஆக அதிகரிக்கின்றது.
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 8737 நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.