ஆபத்தான நிலையை நோக்கி நகரும் இலங்கை : விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!!

2161

ஆபத்தான நிலையை நோக்கி…

நாடு ஒரு ஆபத்தான சூழ்நிலையை நோக்கிச் செல்கிறது. எனவே முழுமையான முடக்கலுக்கு செல்ல அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற பலமுறை கோரிக்கை விடுத்தபோதும் அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயல்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டின் ஆபத்தான சூழ்நிலையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சகத்திடம் தாங்கள் பல கோரிக்கைகளை விடுத்ததாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்தார்.

தினசரி கோவிட் எண்ணிக்கை அதிகரிப்பதால், நோயாளியை ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாமதம் காரணமாக, நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் வரை அவர்கள் தங்கள் வீடுகளில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும். இதன் காரணமாக அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும் என்று ரோஹனா கூறியுள்ளார்.

கோவிட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவ்வளவு சாதகமானவை அல்ல என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, நாட்டை உடனடியாக முடக்குவது குறித்து பரிசீலிக்குமாறும் அல்லது கூடிய விரைவில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுப்பதாக உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-