ஆறு மாதங்களின் பின் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்!!

973

விண்வெளி வீரர்கள்..

நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கிய பின்னர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:57 மணிக்கு பனாமா நகரத்திலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவில் டிராகன் காப்ஸ்யூல் மூலம் தரையிறங்கியுள்னர். விண்வெளி வீரர்களில் மூவர் அமெரிக்கர்கள் என்பதுடன் மற்றைய நபர் ஜப்பானைச் சேர்ந்தவர் ஆவார்.

நாசா மற்றும் எலோன் மஸ்க்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றுடன் கூட்டாக உருவாக்கப்பட்ட க்ரூ டிராகன் விண்கலத்தால் நிலையத்திற்கு வந்த முதல் குழு சுழற்சி பணியின் முடிவினால் அவர்கள் பூமி திரும்பினர் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாசாவின் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர் மற்றும் ஷானன் வாக்கர் மற்றும் ஜப்பானின் சோச்சி நோகுச்சி ஆகிய மேற்படி குழுவினர் 2020 நவம்பர் 15 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் சர்வசே விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டமையும் குறிப்பிடத்கத்கது.