இலங்கையின் எட்டு மாவட்டங்களில் ஆபத்தான நிலமை : ஏனைய பகுதிகளையும் பாதிக்குமென எச்சரிக்கை!!

2031

எட்டு மாவட்டங்களில்..

இலங்கையின் எட்டு மாவட்டங்களில் கோவிட் 19 வைரஸ் பரவல் மிக மோசமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கோவிட் பரவல் வரும் நாட்களில் பாரதூரமானதாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் காணப்படும் தொற்று நோய் பரவல் நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த சங்கம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் சரியான பரிசோதனைகளை நடத்தி தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பது மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது என்பனவும் தாமதமாகி இருப்பதாக அரச மருத்துவ அதிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-