கடத்தி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தவர்களை விடுவித்ததால் இளம் பெண் தீக்குளிப்பு!!

595

Fireதன்னைக் கடத்தி துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கயவர்களை விடுவித்ததால் இளம் பெண் பொலிஸ் நிலையத்தின் முன்னால் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் நகரை சேர்ந்தவர்கள் அமீனாபீபி (18). சம்பவத்தன்று வீட்டில் தனது சகோதரனுடன் இருந்தார்.

அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அமீனாபீபியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர். இது குறித்து முசாபர்கர் நகர பொலிசில் அமீனாபீபி புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து குற்றவாளிகளை பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என கூறி அவர்கள் 5 பேரையும் பொலிசார் விடுதலை செய்தனர்.

அப்போது விசாரணைக்கு வந்திருந்த அமீனாபீபி மனவருத்தம் அடைந்தார். உடனே பொலிஸ் நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

இதனால் உடல் கருகிய அவரை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

தற்போது இந்த வழக்கை மீண்டும் விசாரித்து குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.