யாழ்.நகர பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் விரட்டிப் பிடிப்பு!!

1173

யாழ்..

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(05.05.2021) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரப் பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.