கொரோனா தீவிரம் : இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை!!

657

கொரோனா தீவிரம்..

இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக அங்கிருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவிட் வைரஸின் புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.