வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா!!(படங்கள்)

845

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(16.03) இடம்பெற்றது.

அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது. தொடர்ந்து கலை ஏழு முப்பது மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து ஒன்பதரை மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன் கோவிலான வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி இருப்புக்கு கலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது.

மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். பின்னர் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் இரண்டுமணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து மூன்றுமணியளவில் பிராயசித்த அபிசேகமும் மாலை நாலாரை மணிளவில் பூரணை தினமான இன்று ஸ்ரீ சக்கர பூஜையும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும் தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நாளை காலை ஒன்பது மணியளவில் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளது.

-கஜேந்திரன்-

1 2 3 5 6 7 8 9