இன்று முதல் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் : விபரம் உள்ளே!!

3043

பயணக் கட்டுப்பாடுகள்..

நாடளாவிய ரீதியில், இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு வேளையில் பயணத் தடை அமுலுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்றிலிருந்து இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.