இந்துக் கோவில் எரிப்பு : பாகிஸ்தானில் பதற்றம்!!

524

Hindu Temple

பாகிஸ்தானில் இந்து கோவில் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள லார்கானா பகுதியில் புனித நூலை நபர் ஒருவர் அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்த கோவிலை தாக்கியதுடன், தர்மசாலையையும் தீயிட்டு கொளுத்தினர்.

அப்போது மாணவர் அமைப்பினரும், புனித நூலை அவமதித்தவரை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதனையடுத்து பொலிசார் துப்பாக்கிசூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தும் அவர்களை கலைத்தனர். மேலும் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.