ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல்..!

515


ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது இன்று (25) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.



ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர் மற்றும் மாளிகைக்கு அருகிலுள்ள கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.



குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.