கணவரின் நினைவு தினத்தை குடித்து கும்மாளமிட்டு கொண்டாடிய மனைவி!!

828

Widow

பிரான்சில் விதவை பெண் ஒருவர் தனது கணவரின் நினைவு தினத்தை, கல்லறைக்கு அருகிலேயே மது குடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

பிரான்சின் லெஸ்வேகஸ் என்ற பகுதியில் நேற்று ஜோசைன் கெளட்சன் என்ற விதவை பெண், தன் கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பர்களை அழைத்து கல்லறையிற்கு அருகில் மது விருந்தளித்துள்ளார்.

அப்போது ஷாப்பைன் என்ற ஒருவித மதுவினை கண்ணாடி குவளைகளில் ஏந்தியவாறு ஜோசைன், தனது கணவரது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கூட்டத்தை கலைந்து செல்ல கூறியதுடன், ஜோசனைக்கு 38 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளனர்.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் அபராதம் குறைவாக இருந்தபோதிலும் ஜோசானா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்றும், தன் கணவரை கெளரவிப்பதற்காக மட்டுமே வைக்கப்பட்ட இந்த மது விருந்தில் வேறு எந்த கேட்ட நோக்கமும் இல்லை எனவும் இவரது வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.