மகளுக்கு சிறுநீரக தானம் செய்த தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

447

Baby

பிரிட்டனில் பெற்ற மகளுக்காக தன் சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ள தாயின் செயல் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

இங்கிலாந்தின் பெர்ஹாம் மாகாணத்தில் உள்ள நியூகேசில் பகுதியில் டான் என்ற 38 வயது பெண் ஒருவர் தன் கணவர், மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இவரது எரைன் என்ற பெண் குழந்தைக்கு, பிறந்தவுடனே சிறுநீரம் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டதால் தினமும் அக்குழந்தையை ஐந்து மணி நேரம் சிறுநீரக சிகிச்சை அளிக்க அழைத்து சென்றுள்ளார்.

இவ்வாறு இரண்டு ஆண்டுகளை கடந்தபின் இனிமேல் சிகிச்சை அளித்து பயனில்லாததால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை நிரந்தமாக காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குழந்தையின் தாயே முன்வந்து தனது சிறுநீரகத்தை மகளுக்கு தானம் செய்வதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரொயல் விக்டோரிய குழந்தைகள் மருத்துவமனையில் இவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், எரைனிற்கு சிறுநீரகத்தை மருத்துவர்கள் பொறுத்தியுள்ளனர்.