விமான நிலையங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு!!

1363

விமான நிலையங்கள்…

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

எனினும் நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என விமான சேவைகள் அமைச்சர் சானக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு விமானத்தில் வரக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-