விதிமுறைகளை மீறி ஒரேநாளில் கொழும்பிற்குள் நுழைந்த 78 ஆயிரம் வாகனங்கள்!!

730

கொழும்பிற்குள்..

கொழும்பிற்குள் நுழையும் வாகனங்களுககு 11 நிறங்களிலான ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் 78 ஆயிரம் வாகனங்கள் கொழும்பிற்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பிற்கு வந்து அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களின் வசதிகளுக்காக இந்த புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 6.30 மணியில் இருந்து 3 மணி நேரம் வரையான காலப்பகுதியல் 78784 வாகனங்கள் கொழும்பிற்குள் நுழைந்துள்ளதாக இந்த நடவடிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஹைலெவல் வீதி, காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் நாடாளுமன்ற வீதி ஊடாக இந்த வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் முறை செயற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் தாமதமின்றி எதிர்வரும் நாட்களில் கொழும்பிற்கு நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-