இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா தொற்று : நாள் ஒன்றின் அதிகூடிய மரணங்கள் பதிவானது!!

1115


கொரோனா..



இலங்கையில் மேலும் 54 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும்.



இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




இதன்படி, கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று கொரோனா தொற்றால் 47 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.