இந்திய மீனவர்கள் 75 பேர் கைது..!

364

arrestசட்ட விரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 18 படகுகளில் வந்த இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் 18 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் காரைக்கால் தஞ்சாவூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணம் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.