திருமண ஊர்வலத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் செய்த பிரமிக்க வைக்கும் செயல்!!

2276

தமிழகத்தில்…

தமிழகத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் மற்றும் சுருள் வாள் வீசி அசத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

தூத்துக்குடியின் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் – நிஷா தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் அசாத்தியமாக சிலம்பம் சுற்றி அசத்தினார். அத்தோடு, பாரம்பரியக் கலையான சுருள் வாள் வீசியும் திருமணத்திற்கு வந்தவர்களை அசர வைத்தார்.

அவரின் இந்த அசாத்திய செயலை அங்கிருந்தவர்கள் பிரம்மிப்போடு பார்த்து கைத்தட்டி ரசித்தார்கள். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.