வவுனியாவில் 28 வயதுப் பெண்ணுக்கு 4 வருடங்களாக நடந்த கொ.டூரம் : வைத்தியசாலையில் அனுமதி!!

5080

மெனிக்பாம் பகுதியில்…

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சி.த்.தி.ரவதைக்குபட்ட 28 வயதுடைய பெண்ணை அப் பகுதி கிராம சேவையாளர் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

மெனிக்பாம் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண்ணுக்கு பா.லி.ய.ல் ரீ.தியான து.ன்.பு.று.த்.த.ல் மற்றும் சி.த்.ர.வ.தை.க.ள் இடம்பெறுவதாக குறித்த கிராம அலுவலகருக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து,

கிராம சேவையாளர் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண்ணை மீ.ட்டெடுத்து உ.டல் பரிசோதனைக்காக செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக அப் பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதிக்கு பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை தொடர்பு கொண்டு கேட்டபோது, நேற்றையதினம் கிராம சேவையாளருடன் எமது பொலிஸ் பிரிவினரும் இணைந்தே குறித்த யுவதியினை மீ.ட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம்.

தற்போது யுவதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம் யுவதியிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னரே சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, எனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் யுவதியினை மீ.ட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். மேலதிக வி.சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எனினும் குறித்த பறயனாலங்குளம் பொலிஸார் மந்த கதியில் வி.சாரணைகளை முன்னெடுப்பதாகவும் பெண்கள் பா.துகாப்பு திணைக்களங்கள், அமைப்புக்கள் இணைந்து குறித்த யுவதிக்கு நியாயத்தினை பெற்று யுவதினை பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.