கச்சதீவு அச்சதீவாக மாறிவிட்டது : விஜயகாந்த்!!

314

Vijayakanth

கடலில் மீன்வளம் நிறைந்துள்ள கச்சதீவு, மீனவர்களுக்கு அச்சதீவாகவே மாறிப்போய் விட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

திமுகவும் அதிமுகவும் கச்சதீவை மீட்போம் என்று சொல்கிறார்களே தவிர அதை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

கடிதங்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். கச்சதீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் சுடுவதும், தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. சுருக்கமாகச் சொல்லப் போனால் கச்சதீவு அச்சதீவாகவே மாறிப் போய் விட்டது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரசினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படும் என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் என்னிடம் தெரிவித்துள்ளார் என மேலும் குறிப்பிட்டார்.