இலங்கையில் 109வது பிறந்த நாளை கொண்டாட தயாராகும் 6 பிள்ளைகளின் தாய்!!

1205

ஜோன் நோனா..

நுவரெலியா, கினிகத்தேன கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 6 பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது 109 பிறந்த நாளை கொண்டாட தயாராகியுள்ளது.

1912ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 20ஆம் திகதி அரநாயக்க பிரதேசத்தில் பிறந்த ஜோன் நோனா என்ற பெண் தனது 16வது வயதில் திருமணம் செயதுள்ளார்.

கணவர் உயிரிழந்த பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேன பிரதேசத்தில் குடியேறியுள்ளார். மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரான அவரது மூத்த மகனுக்கு தற்போது 88 வயதாகின்றது.

இந்த நிலையில் இரண்டாவது மகனுக்கு 78 வயதாகின்றது. மூன்றாவது மகனுக்கு 75 வயதாகின்றது. நான்காவது மகளுக்கு 70 வயதும், ஐந்தாவது மகளுக்கு 67 வயதும் ஆறாவது மகளுக்கு 64 வயதாகின்றதென தெரியவந்துள்ளது.

தனது நான்காவது மகளுடன் வசித்து வரும் தாய்க்கு 109வது பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது 6 பிள்ளைகளையும் வளர்த்த தாயை 6 பிள்ளைகளும் தங்களால் முடிந்தளவு நன்றாக பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.