யாழ். பல்கலைக்கழக மாணவர் தாக்குதலை கண்டித்து போராட்டம் : மாணவர்கள் ஐவர் கைது!!

305

1

யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றினை இன்று நடத்தினர்.

கடந்த 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று நுண்கலைப்பீட வளாகத்தில் வைத்து மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் இன்று காலை 10 மணியிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாக்குதல் மேற்கொண்டோர் கைது செய்யப்பட்டு மாணவர்களின் பாதுக்காப்பை பொலிசார் உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவ்வேளை போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு திடீரென வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து மாணவர்கள் உட்பட அறுவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட அறுவரும் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் வெளியாட்களை எற்பாடு செய்து இந்த தாக்குதலை சம்பவத்தை மேற்கொண்டதாக சுன்னாம் பொலிஸார் தெரிவித்தனர்.