ஆடி மாதம் மணப் பெண்ணை வீட்டுக்கு அனுப்ப மறுத்த பெற்றோர் : கணவன் செய்த விபரீத செயல்!!

68294

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி ஆடி மாதம் சோக கீதம் பாடியதால் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்.

இவரது மகன் திலீபன் (33). இவர், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்தார். திலீபனும், அதே பகுதியை சேர்ந்த மருத்துவரான 27 வயது பெண் திவ்யா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை திவ்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் குடும்பத்தினர் மருமகளை அழைத்து வருவதற்காக திவ்யாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.

ஆனால் புதுப்பெண்ணை அவர்கள் அனுப்பாத நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதில், மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று மாலை தனது வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

தகவலறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திலீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.