நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : இன்று வெளியான தகவல்!!

854

கொரோனா மரணங்கள்…

நாட்டில் நேற்று (01) கோவிட் தொற்றால் 63 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 571 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 313,029 ஆக அதிகரித்துள்ளதுடன்,தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 280,868 ஆக அதிகரித்துள்ளது.