நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு!!

1100

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் 74 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4645ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் பதிவான மரணங்களில் 26 பேர் பெண்கள் எனவும், 48 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.